Friday, 7 November 2025

எண்ணும் எழுத்தும் AIயும் - 3

இப்பொழுது AI க்கு வருவோம். AI மனிதன் போலவே சொந்தமாக சிந்திக்கிறது என்று சொல்வதை கொஞ்சம் விரிவாக பார்க்கலாம். AI என்பது ஒரு தொழில்நுட்பம் மட்டுமே. அதனால் உருவாக்கப்படும் பொருட்களோ, செயலிகளோ சொந்தமாக சிந்தனை செய்கிறது என்று சொல்லும் போது நாம் தர்க்கத்தை, கற்பனையை, உள்ளுணர்வை எதை சொல்கிறோம் என்று கூறியாக வேண்டும். அதற்கு முன்னை AI எப்படி செயல்படுகிறது , அதன் அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

நம் சிந்தனைக்கு எப்படி இயற்கையோ அதே போல் AI  க்கு நம் மொழி. அதாவது தரவுகள். ஒரு AI கருவியை உருவாக்க தேவையானது தரவுகளே. தரவுகளைக் கொண்டு எப்படி அது சொந்தமாக முடிவெடுக்கிறது என்பது தான் AI இன் அற்புதம். ஒரு குழந்தைக்கு மொழி கற்று கொடுக்கும் பொது நாம் என்ன செய்வோமோ அதையே தான் AI க்கும் செய்கிறோம். குழந்தையின் மூளை மரபுகளின் வழியாக மொழியினை கற்கிறது. AI யும் அப்படிதான். ஆனால் குழந்தை என்பது ஒரு உயிர். அதுபல  கோடி வருடம் உயிரியல் மாற்றம் கொண்டு, இந்த வளர்ச்சியை பெற்றுள்ளது. ஒரு AI எப்படி சிந்திக்க முடியும்?

இங்கு தான் நமக்கு கணிதமும், நிகழ்தகவும் உதவிக்கு வருகின்றன. இதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு மூலம் விளக்கலாம். "இவன் மரம் ஏறி மாம்பழம் பறித்தான்" என்று முதல் முறையாக AI யிடம் தரவுகள் கொடுக்கும் போது, அது இந்த ஐந்து சொற்களையும் எண்களாக மாற்றி, ஒவ்வொரு சொல்லுக்கும் பல ஆயிரம் பரிமாணங்களை கணக்கிட்டு அந்த பரிமாணங்கள் அந்த சொல்லுக்கு எவ்வளவு நெருக்கமாக உள்ளது என்று ஒரு கணக்கீடு செய்கிறது. உதாரணமாக மாம்பழம் என்ற சொல்லுக்கு அதன் நிறம், அளவு என்று பல்வேறு பரிமாணங்களை அது கணக்கிடுகிறது. அதே போல், ஒவ்வொரு சொல்லுக்கும் உள்ள நெருக்கத்தையும் அது கணக்கிட்டு வைத்து கொள்கிறது. அவ்வாறு அதற்கு கொடுக்கப்படும் பல கோடி தரவுகளை பல்வேறு பரிமாணங்களுடன், கணக்கிட்டு கொண்டு சேகரித்து வைத்து கொள்கிறது. எண்களின் நிகழ்தகவின் வித்தையே AI.

இப்பொழுது புதிதாக ஏதோ ஒரு கேள்வியை அதனிடம் கேட்டால், அந்த கேள்விக்கான பதில் அதனிடம் முன்னரே இல்லாமல் இருந்தாலும் கூட அது ஏற்கனவே கொண்ட தரவுகளின் மூலம் ஒரு யூகத்தை பதிலாக சொல்கிறது. இன்று ஐ வெளிப்படுத்தும் ஒவ்வொரு பதிலும் யூகமே. அதனால் யூகிக்க மட்டும் தான் முடியும். இங்கு நாம் இந்த யூகத்தையே AI யின் சிந்தனை என்று சொல்கிறோம். அதனால் தான் அதனிடம் இல்லாத ஒரு விடையையும் அது 'சிந்தித்து' தருகிறது.

இங்கு நாம் பேசி கொண்டிருப்பது LLM (Large Language Models) ஐ பற்றித்தான். இது AI யின் ஒரு அங்கம். மொழியை (Language) துணை கொண்டு மட்டுமேஇது செயல்படுகிறது. நாம் இன்று பயன்படுத்தும் CHATGPT, GROK, PERPLEXITY, GOOGLE AI என்று அனைத்து செயலிகளுக்கும் காரணம் 2017 லில் வெளிவந்த "Attention Is All You Need" என்ற கோட்பாடு மட்டுமே. இந்த AI அடிப்படையில் ஒன்றே ஒன்று தான் செய்கிறது. அடுத்த சொல்லை யூகிப்பது. எல்லா AI  யும், இது மட்டுமே செய்கின்றன. அடுத்த சொல்லை யூகித்தல். இந்த யூகித்தல் என்பது நிகழ்தகவின் மூலம் நடைபெறுகிறது. நம்முடைய மூளை நரம்புகளில் இது தன்னிச்சையாக நடைபெறும் என்றால், இந்த யூகத்தினை AI வெளிப்படுத்த அதி நவீன computing சக்தி கொண்ட chip கள் வேண்டும். 

சரி, வெறும் யூகம் மட்டும் தான் AI  செய்கிறதா? அப்படி என்றால் அதனை நம்பலாமா என்ற கேள்விகள் நம்மிடம் எழலாம். ஆமாம், வெறும் யூகம்  மட்டும் தான் AI செய்கிறது. ஒரு சாதாரண கால்குலேட்டரிடன் நாம் 3+4 எவ்வளவு என்று கேட்டால் அது கொடுக்கும் விடையை நாம் நூறு சதவிதம் நம்பலாம். ஏனென்றால் அது deterministic கொள்கை படி வேலை செய்யும் ஒரு பொருள். AI யிடம் இதே கேள்வியை கேட்டால் அது 7 என்று பதில் சொல்லுமா என்று அறுதியிட்டு கூறி விட முடியாது. அப்போது எதற்கு இந்த AI?

இதெல்லாம் தொடங்கியது " Predict the next word " என்ற கேள்வியில் இருந்தே. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் மனிதன் இன்று வரை இதை மட்டும் தான் செய்து கொண்டிருக்கிறான். அடுத்த வார்த்தையை யூகிப்பது. அது இலக்கியத்தில் ஆனாலும், அறிவியலில் ஆனாலும், எந்த ஒரு துறையிலும். இங்கு வார்த்தை என்பது அறிவாக மாறும் போது, சிந்தனையின் உச்சங்களை அடைகிறோம். அடுத்த வார்த்தையை உருவாக்குவது ஒரு படைப்பே. அது கடவுளுக்கு சற்றும் குறைவில்லாத செயல். அது AI செய்ய தொடங்கியது என்றாலும் அதற்கு எல்லைகள் உள்ளது. அதனால் மொழியிலிருந்தும், கணித விதிகளிலிருந்தும் அதனால் வரும் நிகழ்தகவிலிருந்தும் வெளி வர முடியாது.

இங்கு நாம் மனிதனின் சிந்தனைக்கும், AI யின் யூகத்திருக்கும் இருக்கும் ஒற்றுமையும், வேறுபாடுகளையும் பார்க்க வேண்டும். நம் சிந்தனையும் நிகழ்தகவின் ஒரு புள்ளியே. ஆனால் அதற்கு மூலப்பொருள் இப்பிரபஞ்சம். ஆனால் AI  க்கு மூலப்பொருள் சொற்கள் மட்டுமே. மொழியாக்கிய மனித உணர்வுகளை மட்டுமே AI யால் யூகிக்க முடியும். அதனால் தான் நாம் அது நம்மை போல் சிந்திக்கிறது என்று சொல்கிறோம். உண்மையில் அது யூகிக்கிறது. மொழியாக்கப்படாத எந்த ஒன்றையும் அதனால் யூகிக்க முடியாது. அல்லது தவறான யூகங்களை கொடுக்கும். ஒரு எலி என்ன சிந்திக்கிறது என்று அதனால் சொல்ல முடுயாது. ஆனால்  ஒரு மனிதன் ஒரு தருணத்தில் என்ன செய்வான் என்று அதனால் ஓரளவிற்கு யூகிக்க முடியும்.

இந்த Transformer (CHAT GPT யில் இருக்கும் T) கொள்கையை உருவாக்கிய ஒருவரிடம் "why do  LLMs work? " என்று கேட்ட போது.' Maybe God's Benevolence ' என்று பதில் சொன்னார். அதை நான் முன்னே கூறியது போல நிகழ்தகவாகிய  'கடவுளின் கை' என்றே கூறுவேன்.

இன்று GPT யை வைத்து எழுதிய கதைகளும், AI யை கருப்பொருளாக நாம் எழுதிய கதைகளும் வந்து கொண்டிருக்கிறது. அறிவை சொற்களால் ஏதோ ஒரு நிகழ்தகவின் மூலம் அது யூகித்தாலும், அதை உணரும் மனிதனாலேயே , அந்த யூகம் முழுமை கொள்கிறது. 

எண்ணும் எழுத்தும் AIயும் - 2

                                                                      (2)

இன்று அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ AIயை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திக்  கொண்டிருக்கிறோம். மனிதன் முதன் முதலில் தனது உணவு தேவைக்காக கல்லை கூராக்கி பயன்படுத்தியது முதல் இன்று உள்ள AI வரை, அனைத்தும் அவன் உருவாக்கிய பொருட்களே. இங்கே பயன்பாட்டுக்குக்காக உருவாக்கும் பொருட்களின் அடிப்படை விதிகளை நாம் மேலோட்டமாகா கடந்து சென்று விடுகிறோம். ஒரு ஸ்விட்ச் போட்டால் , ஏன் மின்விசிறி ஓடுகிறது போன்ற பல்வேறு அடிப்படைகள்  நமக்கு தெரிந்திருந்தாலும் அதை பற்றி அதிகம் கண்டு கொள்வதில்லை. ஏனென்றால் அவை நம் அன்றாடத்தில் ஒரு அங்கமாக மாறி விடுகிறது. அப்படி மாறிய பின்னர் நம்மால் அதை பிரித்து பார்த்து சிந்தனை செய்ய முடிவதில்லை. இன்று நம் அன்றாடத்தில் ஒரு அங்கமாக மாறி கொண்டிருக்கும் AI க்கும் இதே நிலை தான். 

கல் ஈட்டி முதல் AIக்கு முன்னர் வரை மனிதன் உருவாக்கிய அனைத்து பொருட்களும், இயந்திரங்களும் deterministic கொள்கையின் வரையறைப்படியே செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஒரு ஸ்விட்ச் போட்டால் , மின்விசிறி சுழலும் என்பது ஒரு இயற்பியலின் கொள்கைபடி நடந்து கொண்டிருக்கிறது. அதன் செயற்பாட்டை துல்லியமாக முன்கூட்டிய நம்மால் கணிக்க முடியும். ஒரு பொருள் என்ன வேலை செய்தாலும், அந்த வேலை ஏன் செய்கிறது என்ற கொள்கையை நம்மால் சொல்ல முடியும். நடைமுறையில் அப்படி கொள்கைகள் உருவான பின்னர் தான் பொருட்களை தயார் செய்கிறோம்.

AI என்பது இதற்கு சற்று மாற்றானது. முதலில் AI என்பதன் தமிழாக்கம் "செயற்கை நுண்ணறிவு" என்று வகுத்தால், AI மூலம் இயங்கும் ஒரு பொருளோ/இயந்திரமோ தானாக முடிவுகளை எடுத்து செயல்படும் என்று வரையறை செய்யலாம். AI க்கு முன்னர் வரை ஒரு பொருள் எந்த வேலை செய்கிறதோ அது மட்டும் தான் அதன் பயன்பாடு. அது தானாக முடிவுகளை எடுத்து செயல்படாது. அதனால் தான் அவற்றை deterministic கொள்கையின் மூலம் உருவானவை என்று சொல்கிறோம்.  

அனைத்து பொருட்களும் இந்த "முடிவெடுப்பது" என்ற வேலையை தான் செய்கின்றன. ஆனால் அதற்கான  programmes அந்த பொருட்களின் மென்பொருளில் ஏற்கனேவே இருக்கும். அதன் மூலம்  தான் அந்த பொருளே செயல்படும். இங்கு சுயமாக "முடிவெடுத்தல்" என்பது இல்லை. அது பங்கு சந்தை செயலிகளாக இருந்தாலும், விமான டிக்கெட் செயலிகளாக இருந்தாலும். உலகத்தில் உள்ள அனைத்து செயலிகளும் அதில் பொருத்தி உள்ள மென் பொருளின் மூலமே deterministic ஆக செயல்படுகிறது. ஒரு கல் ஈட்டியும் இந்த அதி நுட்ப செயலிகளும் ஒரே கொள்கையின் படி செயல்படுகிறது. அது deterministic கொள்கை.

இங்கிருந்து தான் நாம் அடுத்த கட்ட நகர்வுக்கு சென்று கொண்டிருக்கிறோம். probabilistic கொள்கை அல்லது நிகழ்தகவின் கொள்கை. இந்த நிகழ்த்தவு என்பதை நான் "கடவுளின் கை" என்று வரையறை செய்வேன். ஒட்டு மொத்த பிரபஞ்சமே ஒரு நிகழ்தகவின் வெளிப்பாடே. இந்த நொடியில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது இந்த பிரபஞ்சத்தில் உள்ள கோடான கோடி நிகழ்தகவின் ஒரு புள்ளி மட்டுமே. இல்லாத இருப்புகளினாலேயே இருப்பது பொருள்படுகின்றதுஇதை நான் power of probability என்று சொல்வேன்ஒரு வேளை இந்த நிகழ்தகவு தான் உயிர் என்னும் கருதுகோளை உருவாக்கியதோ?

மனிதனின் சிந்தனையை எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் கூறுவது போல மூன்று வகையாக பிரிக்கலாம். தர்க்கம் (Logic), கற்பனை (Imagination), உள்ளுணர்வு (intuition). நம் அனைத்து சிந்தனைகளும் இவற்றின் ஊடும் பாவுமே. தர்க்கத்திலிருந்து மேலெழுந்து கற்பனைக்கும், அங்கிருந்து உள்ளுணர்விற்கும், இப்படி ஒன்றிலின்று மற்றொன்றிற்கு நம் சிந்தனை சென்று கொண்டே இருக்கிறது. இப்படி நாம் சிந்திப்பதும் ஏதோ ஒரு நிகழ்தகவின் ஒரு புள்ளி மட்டுமே. தர்க்கரீதியாக நாம் சிந்தனை செய்தால் அதில் ஒரு நேர்கோடு இருக்கும். ஆனால் ஒவ்வொரு தர்க்கமும் அது முதன் முதலில் உருவாவதற்கு கற்பனையாலோ, உள்ளுணர்வாலோ தான் சாத்திய பட்டிருக்கும். எந்த ஒரு அறிவியல் தர்க்கமும் இதில் அடங்கும். ஒரு அறிவியலாளர் ஏதோ ஒரு புள்ளியில் ஒரு கொள்கையினை கண்டு பிடிக்கிறார். அது Faraday வின் ElectroMagnetic Theory ஆனாலும் சரி. ஒரு சிந்தனையை நாம் வரையறுத்து அதற்கு விதிகளை அளித்து அதனை "தர்க்கபடுத்திகிறோம்". மனிதன் கற்காலம் முதல் இன்று வரை செய்து வருவது இந்த "தர்க்கபடுத்துவதை" தான்.

தர்க்கப்படுத்துவதற்கு முதன்மையான கருவி என்பது கணிதம். நம்முடைய அனைத்து அறிவியல் கோட்பாடுகளும் கணிதத்தின் மேல் அல்லது கணித விதிகளின் மூலமே செயல்பட்டு கொண்டிருக்கிறது. இது இயற்கையை நாம் வரையறை செய்யும் பொருட்டு உருவாக்கிய ஒரு கருவி. நான் கணிதத்தையும் ஒரு மொழி என்றே குறிப்பிடுவேன். மொழியின் சுவையும் எண்களில் புதைந்து உள்ள ஆழத்தையும் உணர்பவர்களுக்கு நான் ஏன் கணிதத்தை மொழி என்கிறேன் என்பது புரியும். பிரபஞ்சம் உருவாக்கிய முதல் மொழி அது. அது தன்னை தான் உணரும் பொருட்டு அடைந்த மொழி. 

இன்னொரு தளத்தில் மனிதன் சிந்திப்பதற்கும், அவனையுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும் "மொழி" உருவானது.  நம் ஆழ்மனதில் ஒவ்வொரு சொல்லுக்குமான உணர்வினை நாம் சேர்த்து வைத்திருக்கிறோம். அந்த சொல்லின் வெளிப்பாடாக உணர்வும், அந்த உணர்வின் வெளிப்பாடாக சொல்லும் செயல்படுகிறது. நாம் இயற்கையிலிருந்து மொழியை  கற்பனை மூலம் உருவாக்கினோம். நம்முடைய சிந்தனைக்கு பயன்படுவது நம்முடைய புலன்கள். புலன்கள் மூலம் நாம் அறிந்தவற்றை நம் கற்பனை மீதேற்றி மொழியை உருவாக்குகிறோம். 

 நம் சிந்தனையின் அடிப்படை புலன்கள். புலன்கள் இயற்கையில் உள்ளவற்றை உயிரியல் தேவைக்காக அறியும் பொருட்டு உருவானவை. தீயை தொட்டால் சுடும் என்று மொழி உருவாவதற்கு முன்பே நம் புலன்கள் அறியும். பின்பு சுடுதல் என்ற சொல்லின் மேல் அந்த உணர்வினை ஏற்றினோம். இப்படி நம் சிந்தனையை புலன்கள் கட்டுப்படுத்தினால், அதற்கு அப்பாற்பட்ட சிந்தனையும் உண்டு. அதை 'உள்ளுணர்வு' என்கிறோம். கற்பனை இவ்விரண்டிற்கும் இடையில் உள்ளது. 

இந்த கற்பனையும், உள்ளுணர்வும் ஏன் நமக்கு ஏற்படுகிறது என்று நம்மால் அறுதியிட்டு கூறிவிட முடியாது. இந்த பிரபஞ்ச நிகழ்தகவின் ஏதோ ஒரு புள்ளியில் அது நடைபெறுகிறது. அப்படி என்றால் அது எந்த ஒரு தர்க்கத்திற்கும் அடங்காது. அதனை ஒரு சமன்பாட்டையோ சூத்திரத்தையோ கொண்டு அடுத்த உள்ளுணர்வு இந்த நேரத்தில் இவருக்கு இது ஏற்படும் என்று கூறி விட முடியாது. மாறாக நாம் புலன்களின் மூலம் அறிப்படுவது ஒரு எல்லைக்குள் உள்ளது. அதிலும் அப்பொழுது ஒருவர் இருக்கும் சூழ்நிலையும், அவருக்குள் ஓடும் மற்ற எண்ணங்களையும் வைத்தே அவர் ஒரு புலன் உணர்வுக்கு என்ன எதிர்வினை செய்கிறார் என்று அறிய முடியும். ஒருவர் புல்வெளிகளை பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சி அடையலாம். ஆனால் அந்த சமயத்தில் அவருக்கு கடுமையான பசி இருந்தால் அதனை அவரால் ரசிக்க முடியாது. 

இப்படி எந்த ஒரு உணர்வை அடைதலும் ஒரு நிகழ்தகவின் வாய்ப்பே. ஆனால் இந்த நிகழ்த்தகவு புலங்களினால் ஏற்படும் எண்ணங்களுக்கு கொஞ்சம் அதிகமாக நாம் வரையறை செய்யலாம். இவற்றையே நாம் தர்க்கமாக கொள்கிறோம். வெயில் சுடும். மழை குளிரும் போன்ற பொதுவான எண்ணங்களுக்கு இதுவே காரணம். 


எண்ணும் எழுத்தும் AIயும் - 1

கணிதமும், இயற்பியலும் நான் விரும்பி படித்த பாடங்கள். வெறும் பாட புத்தகம் மற்றும் படிக்காமல் அதை மேலும் தெரிந்து கொள்வதற்காக அவை தொடர்பான மற்ற புத்தகங்களையும் வாசிப்பேன். அவ்வாறு படிக்கும் போது அதில் நான் விரும்பியது கணித சூத்திரங்களும், இயற்பியல் கொள்கைகளும்.அதற்கு காரணம், இப்பொழுது நினைக்கும் போது,அதன் அழகாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்.

பித்தகோரஸ் theorem( இப்போது சாதாரணமாக சொன்னாலும்நவீன அறிவியலில் இதன் பயனில்லாத எதுவுமே இல்லைஇப்போ அனைவரும்  AI வரையில் பயன்படுத்தும் செயலிகளில் கூடபோன்றவை கொண்டிருக்கும் அழகு தான்என்னை அவற்றின் மேல் இழுத்தது

எந்த ஒரு கணித சூத்திரமாக இருந்தாலும் அதை step by step ஆக கொண்டு நிறுவுவது ஒரு பேரழகு.


அதன் அர்த்தங்கள், ஆழங்கள் ஒவ்வொரு ஸ்டெப்பிலும் கொஞ்சம் கொஞ்சமாக துலங்கி 

வரும். ஒன்றாம் ஸ்டெப்பில் எழுதுவதற்கும், பத்தாம்  ஸ்டேப்பில் வருவதற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. அப்படி அடுத்து வருவதை எதிர்நோக்கி , ஒரு அடி வைத்து , புதியதாக  

உருபெற்று வரும் ஒன்றை உணர்வது உச்ச தருணம்.


எப்போதும் அடுத்து என்ன வரும் என்ற எதிர்பார்ப்பே அறிவுலகை வழி நடத்தி செல்கிறதுஅது எந்த துறையாக இருந்தாலும் சரி.அந்த அடுத்து என்பது புதியதுதூயதுஅது அங்கே என்றும் கண்ணுக்கு தெரியாமல் இருந்து கொண்டிருப்பதாக கூட இருக்கலாம்


ஒவ்வொரு எண்ணிற்கும் உள்ள உறவை ரசிப்பது போன்ற மகிழ்ச்சி ஏதுமில்லைஒவ்வொரு எண்ணும் நம்மிடம் பேசி விளையாடும்மறைந்திருக்கும் பொருளை கண்டு பிடிக்க அடிபோடும்அதே போல் ஒவ்வொரு எண்ணும் மற்ற எண்ணுடன் சேர்ந்து பிரிந்து மோதி விளையாடும்அப்படி அந்த எண்களின் விளையாட்டு தான் இந்த மொத்த பிரபஞ்சமும் என்ற தோன்றும.அனைத்திற்கும் பொதுவான சூத்திரத்தை கண்டு பிடிப்பது தானே ஒவ்வொரு அறிவியலாளனும் முயற்சிக்கும் லட்சியம்அப்படி ஒவ்வொன்றாககண்டுபிடித்து தான் நாம் இன்று AI வரைக்கும்  வந்துள்ளோம். இந்த ஒவ்வொறு step  by step என்பது logical reasoning. 


அப்படி அவ்வளவு சுலபமாக தர்க்கத்தை  வரையறை செய்ய முடியுமா என்னஅது கணிததிற்கோ மற்ற பாடங்களுக்கோ பொருந்தும்ஏனென்றால் அது அதனதன் பொதுவான விதிகளால் கட்டமைக்கப்படுகிறதுஆனால் நம் சிந்தனையைமொழியை அப்படி கட்டமைக்க 

முடியுமா? நம் சிந்தனை தான் சூத்திரமாக உருமாருகிறதாஅல்லது நம் சிந்தனை அதனை உருவாக்கும் ஒரு கருவி மட்டும்  தானா


நம் சிந்தனையும் அதுபோலதான்அடுத்து நாம் என்ன  யோசிக்கிறோம் என்பதை நாம் எப்படி அறிகிறோம்அப்படி நம்மால் நாம் அடுத்து செய்யும் 

செயலையோசொல்லையோ யூகிக்க முடியுமாஒரு சூத்திரத்தில் அடுத்தடுத்து துழங்கி 

வருவதும்ஒருகவிதையில் கற்பனையில் நிறைந்து செல்வதும் ஒன்றாகுமா?