Sunday 19 July 2020

காகிதம் - 2

                                                        காகிதம் - 2

   இன்று 'ராஜ் கௌதமன்' அவர்களின் 'தலித் பார்வையில் தமிழ்ப்  பண்பாடு' என்னும் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். புத்தகம் அக்கால தமிழ் மக்களின் வாழ்க்கை முறையை சங்கப் பாடல்களின் வழியே நிறுவ முயல்கிறது. 50 பக்கங்கள் வரை படித்து முடித்துள்ளேன்.
   தினமும் காலையில் 5 மணிக்கு எழ வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். கண்டிப்பாக ஒரு ஒழுங்கு முறையோட கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் பின்பற்றுவதில் மிகவும் சிரமமாக உள்ளது. எப்படியாவது காலையில் சீக்கிரம் எழுந்து யோகா பயிற்சி செய்து ஒரு 2 மணி நேரம் தவறாமல் வாசிக்க வேண்டும். 
   

No comments:

Post a Comment