Saturday, 25 January 2025

கங்கைத்தாய் - நூல் குறிப்பு

                                                              கங்கைத்தாய் 





கங்கை கரையில் வாழும் மக்களின் வாழ்க்கையை சொல்லும் நாவல் 'கங்கைத்தாய்'. ஒரு குடும்பத்தின் வீழ்ச்சி மூலமாக அக்காலகட்ட சமூக அவலங்களை சொல்கிறது. முக்கியமாக விதவை மறுமணம் செய்து கொள்வதில் உள்ள சமூக இறுக்கங்களை பேசுகிறது.

மாணிக், கோபி என்ற சகோதரர்களின் தனிப்பட்ட வாழ்வில் நடக்கும் வீழ்ச்சியை சொல்லி, அதனூடாக ராஜபுத்திர வம்சங்களில் கடைபிடிக்கப்படும் சாதிய வழக்க முறைகளை சொல்கிறது. 

மட்டுரூ வழியாக கங்கையின் பிரவாகத்தையும், அதன் கரையின் வாழும் மக்களின் அன்றாடங்களையும், ஜமீன்தாரி முறையின் கொடுமைகளையும், அரசின் அடக்குமுறையும் சொல்கிறது. கங்கை கரையில் வாழும் மக்கள் நீரின் அளவை பொறுத்து தங்களின் குடிசையை மாற்றி அமைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் கங்கையை எப்பொழுதும் தங்கள் அன்னையாக, தங்களுக்கு உணவிடும் தாயாகவே நினைக்கிறார்கள்.

முழுக்க முழுக்க விவசாய கிராமங்களை பற்றிய கதை இது. பயிர் விளைந்தால்தான் அந்த வருஷம் சாப்பாடு என்றிருந்த காலத்தில் நடக்கிறது கதை.

கோபியின் விதவை அண்ணியின் மன ஓட்டங்களையும், சஞ்சலங்களையும் வாசிக்கையில்  S. L பைரப்பா அவர்கள் எழுதிய "வம்ச விருட்சம்" நாவல் தான் நினைவிற்கு வந்தது. இந்திய இலக்கியங்களில் எழுதிய ஒரு சிறப்பான படைப்பு "வம்ச விருட்சம்". 

கங்கைத்தாய் நாவல் படிப்பதற்கு எளிமையாகவும், இந்தியாவில் மக்கள் மனதில் பண்பாட்டு ரீதியாக தொடங்கிய சமூக மாற்றத்தை சொல்கிறது.